மகளிர் மலர்



இயேசு பிரகாசிக்கிறார் மகளிர் மலர் இணைய தளத்திற்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

இந்த இணைய தளம் வாழ்க்கையில் முன்னேற விரும்பும் பெண்களுக்கு வழிகாட்டும் வழிகாட்டியாக செயல்படும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. இன்று பெண்கள் பல துறைகளில் சாதனை செய்து பிரகாசித்தாலும், இன்னும் முழுமையாக பெண்கள் சுகந்திரமாக செயல்பட கூடிய நிலை நம் நாட்டில் வரவில்லை. ஒரு சில வீடுகளில் பெண்களுக்கு தரப்படும் மிதமிஞ்சிய சுகந்திரம் அவர்களை தவறான பாதைகளில் செல்ல தூண்டுகிறது. இன்னும் சில வீடுகளிலும், அலுவலகங்களிலும் பெண்களை அடிமை அல்லது ஒரு பொருளை போல் பயன்படுத்தி வரும் கொடுமையும் நடந்து வருகிறது. இந்தியா சுகந்திரமடைந்து பல ஆண்டுகள் கடந்தும் பெண்களை பற்றி சமூகம் வைத்திருக்கும் மதிப்பீடு மோசமாகவே உள்ளது.
வாழ்வில் நாம் சந்தித்து வரும் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கடவுளிடத்தில் உண்டு. கடவுள் மட்டுமே நம்முடைய பிரச்சினைகளில் இருந்து நம்மை முழுமையாக விடுவித்து சமாதானமும் சந்தோஷமும் தந்து நம்மை வழிநடத்த முடியும். மனிதர்களிடத்தில் வெளிப்படையாக நம் குறைவுகளை கஷ்டங்களை சொல்வதால் நம் மனகஷ்டம் குறையலாம் ஆனால் அது பிரச்சினைக்கு தீர்வு ஆகாது. அது சில சமயங்களில் உங்களை பற்றி தெரிந்து கொண்டு உங்கள் வாழ்க்கையில் விளையாடி விட கூடிய நிலையும் வந்துவிட வாய்ப்பு உள்ளது. ஆனால், உங்கள் பிரச்சினைகளை நீங்கள் கண்ணீரோடு சொல்லும்போது அதை கேட்கவும், பார்க்கவும், அந்த பிரச்சினையில் இருந்து உங்களை விடுதலை செய்யவும் கூடிய உயிருள்ள, சக்தியுள்ள தெய்வம் ஒருவர் உண்டு.
உங்களை பற்றியும், உங்கள் எதிர்கால வாழ்வை குறித்தும் யாரும் கவலைப்படவில்லை என்றும், எல்லோரும் உங்களை கைவிட்டுவிட்டது போலவும் நீங்கள் நினைக்கலாம். ஆனால் உங்களை பற்றியும், உங்கள் எதிர்கால வாழ்க்கையை பற்றியும் அக்கறையோடு விசாரித்து நல்வழியில் நடத்த கூடிய தெய்வம் இயேசு. நீங்கள் அனுபவித்து வரும் எந்த பிரச்சினையானாலும், நோயானாலும் இயேசுவால் உங்களுக்கு விடுதலையும், சுகமும் தந்திட முடியும். ஏனென்றால் உங்களுக்கு சந்தோஷமும், சமாதானமும் தருவதற்காகவே இயேசு உங்கள் கஷ்டங்களை எல்லாம் சிலுவையில் சுமந்து தீர்த்து விட்டார். இன்றைக்கு உங்கள் வாழ்வில் ஒரு அற்புதத்தை பெற விரும்பினால் உங்கள் உள்ளத்திலிருந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள ஜெபத்தை நம்பிக்கையோடு ஜெபியுங்கள். இன்று நிச்சயமாக நீங்கள் அற்புதத்தை பெற்று கொள்வீர்கள்.

ஜெபம்:
என் அன்பு பரலோக தகப்பனே,
நான் இந்நாள் வரை அறிந்தும் அறியாமலும் செய்த எல்லா பாவங்களையும் எனக்கு மன்னியும். என் ஆவி, ஆத்துமா, சரீரத்தை எனக்காக கல்வாரி சிலுவையில் இயேசு சிந்திய ரத்தத்தால் கழுவி சுத்தம் செய்யும். என் உள்ளத்தில் வந்து தங்கி என்னை உம்முடைய பரலோக சந்தோஷத்தினாலும், சமாதானத்தினாலும் என்னை நிரப்பி ஆசிர்வதமான வழியில் நடத்தும்படி வேண்டுகிறேன். இந்த ஜெபத்தை கேட்டு நீர் எனக்கு நன்மை செய்து விட்டதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன்,
நல்ல பிதாவே,
ஆமென்.

இயேசு கிறிஸ்து தன்னை நம்பி வந்த எவரையும் கைவிட்டதில்லை. தொடந்து நீங்கள் வெற்றிகரமான வாழ்வை நடத்த இயேசுவின் வார்த்தைகளை படித்து நம்பிக்கையோடு ஜெபியுங்கள், அவர் நடத்தும் பாதையில் தொடர்ந்து செல்லுங்கள். உங்கள் வாழ்வு செழிக்க இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறோம்.
அன்புடன்,
இயேசு பிரகாசிக்கிறார் மகளிர் மலர்.

மின்னஞ்சல் முகவரி: jesusshines@in.com

அலைபேசி எண்: 9884677764